ரஞ்சிதாவும் வந்ததில்லை,பஜனையும் நடக்கவில்லை-மதுரை ஆதீனம்

இதுகுறித்து மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் வருந்ததக்கதாகும். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்தது முதல் அவர் மீது வேண்டுமென்றே கற்பனை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
யார் எந்த குற்றச்சாட்டுகளை கூறினாலும் என்னை பொறுத்தவரை நித்தியானந்தா நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். எந்த சூழ்நிலையிலும் நான் கூறும் இந்த கருத்துக்களை மாற்றமாட்டேன். நித்தியானந்தா மதுரையில் இல்லாததால் ஆதீன மடத்தில் பூஜைகள் எதுவும் தடைபடவில்லை. வழக்கம் போல அனைத்து பூஜைகளும் செய்து வருகிறோம்.
நித்தியானந்தா சீடர்கள் முறையான ஆன்மிக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆதீன மடத்தில் அன்னதானம், பூஜைகள், பரிகாரங்கள் நடந்து வருகிறது.
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமான நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்று எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து கர்நாடக போலீசார் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
இந்து மக்கள் கட்சியின் சோலைகண்ணன் கற்பனையான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கூறி உள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நான் இதுபற்றி அதிகம் கூற விரும்பவில்லை. எனினும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். சோலைகண்ணன் கூறியபடி அவரை ஒருபோதும் நான் ஆதீன மடத்திற்கு அழைக்கவில்லை.
மடத்தில் பஜனை நடந்ததாகவும், அதில் நடிகை ரஞ்சிதா பங்கேற்று இருந்ததாகவும், புனித நீர் கொடுத்தபோது மயக்க நிலையில் ஆபாச நடனங்கள் நடந்ததாக அவர் கற்பனையான, போலியான குற்றச்சாட்டுகளை மடத்தின் மீது சுமத்தியுள்ளார்.
நடிகை ரஞ்சிதா மடத்திற்கு வந்ததில்லை. புலி தோல்கள் விரிக்கப்பட்டு யானை தந்தங்கள் வைத்து அவராக யூகித்து பூஜைகள் நடந்ததாக கூறி உள்ளார். மடத்தில் புலி தோல், யானை தந்தங்கள் உள்ளனவா? என யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக்கொள்ளலாம்.
ஆதீன மடத்தை களங்கப்படுத்த யார் முயற்சி செய்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி எடுப்போம். சோலைக்கண்ணன் மீது மான நஷ்ட வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications