8 வயது மகளை பப்பில் மறந்துவிட்டுச் சென்ற யு.கே.பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா, மகள் நான்சி(8) மற்றும் 22 மாதக் குழந்தையான பிலாரன்ஸ் மற்றும் நண்பர்களுடன் கேட்ஸ்டென்னில் உள்ள ப்ளவ் இன்னில் மதிய உணவு உண்டார். அதன் பிறகு தனது பாதுகாவலர்களுடன் அவர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
குழந்தைகள் சமந்தாவுடன் வருவார்கள் என்று நினைத்து அவர் சென்றுவிட்டார். நான்சி தனது அப்பாவுடன் காரில் சென்றுவிட்டார் என்று நினைத்து சமந்தா வேறொரு காரில் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.
வீட்டுக்கு சென்ற பிறகு தான் நான்சி எந்த காரிலும் இல்லை என்பது தெரிய வந்தது. உடனே பப்புக்கு போன் செய்து கேட்டபோது நான்சியை கழிவறை அருகே பார்த்ததாகவும், அவர் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கேமரூன் அந்த பப்புக்கு சென்று மகளை அழைத்து வந்தார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications