பீர் விலை உயர்வு: தமிழக அரசு அதிரடி.. அடுத்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்?

Subscribe to Oneindia Tamil

Beer
நெல்லை: டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருவாய் கைகொடுத்து வருகிறது. தற்போது தமிழக அரசின் கூடுதல் இலவச திட்டங்களுக்காக டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால் அனைத்து கடைகளுக்கும் 20 சதவீதம் வரை விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரபல வெளிநாட்டு மதுபானங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாணடு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டின் போது வெளிமாநில ஒயின் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பீரின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. ரூ.65, 75, 85க்கு விற்பனை செய்யப்பட்ட பீரின் விலை ரூ.70, 80,90க அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, ஜின், ஒயின் போன்றவற்றின் விலையும் விரைவில் உயரலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+