கை நிறையப் பணம், போன், சிம் கார்டுகளுடன் 8 சீன ஒற்றர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மந்தி: இமாச்சல் பிரதேச மாநிலத்திற்குள் ஊடுறுவிய 8 சீன உளவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் பணம், மொபைல் போன், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தச்சர்கள் என்ற போர்வையில் இவர்கள் இமாச்சலுக்குள் வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியஉள்ளனர். அந்த வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறுகிறார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் பல ஆண்டுகளாக இவர்கள் வசித்து வந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இந்த வீடு திபெத்திய மதத் தலைவர் ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த மதத் தலைவர் தற்போது தலைமறைவாகி விட்டார். டெல்லிக்கு அவர் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பிடிக்கஇமாச்சல் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

பல காலமாக இந்த உளவாளிகள் இங்கு தங்கியிருந்ததால் இவர்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்தில்தான் தன்னைக் கொல்ல சீனா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த சீன உளவாளிகளிடம் அத்தகைய திட்டம் ஏதும் இருந்ததா என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+