'ஜனாதிபதி': பிரணாபுக்கும் ஆதரவில்லை, அன்சாரிக்கும் ஆதரவில்லை- மம்தா, முலாயம் அறிவிப்பு!

ஆனால், இந்த இருவரையுமே ஆதரிக்க முடியாது என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 19ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பேசினார்.
பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அவரை ஆதரிக்க முடியாது என்று மம்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே போல இடதுசாரிகளுடன் நெருக்கமாக உள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியையும் ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதையடுத்து நேற்று சோனியா காந்தியும் அவரது அரசியல் செயலாளர் அகமத் படேலும் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசினர்.
இதையடுத்து சோனியாவை மம்தா பானர்ஜி இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மம்தா, காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க நினைக்கிறது. அவர்களது முதல் சாய்ஸ் அவர் தான். இரண்டாவது சாய்ஸ் தான் ஹமீத் அன்சாரி. ஆனால், நான் காங்கிரசின் வேட்பாளர் சாய்ஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.
அதே நேரத்தில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை மம்தா நிருபர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அவர் ஹமீத் அன்சாரியை ஆதரிப்பதாகத் தெரிகிறது. சோனியா சந்தித்த பின் மம்தா சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசினார். அதில் தான் காங்கிரஸ் கட்சியின் இரு வேட்பாளர்களையும் நிராகரிப்பது என்ற முடிவை முலாயமும் மம்தாவும் எடுத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications