'ரெய்சினா ஹில்' அப்படிங்கிறாங்களே, அப்படின்னா என்ன?

வெள்ளையர் ஆட்சியின் ஆரம்பத்தில் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தாதான் இருந்து வந்தது. வெள்ளைக்கார அரசாங்கம் தலைநகரை டெல்லிக்கு மாற்ற தீர்மானித்தது. 1911ல் தலைநகராக டெல்லி உருவானது. இதற்காக ஒரு திட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தலைநகருக்குத் தேவையான அலுவலகங்கள், கட்டடங்களை உருவாக்க இடம் பார்த்தது.
தற்போது உள்ள டெல்லி நகருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சற்று உயரமான பகுதியில் தலைநகரின் தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை அமைக்க தீர்மானமாயிற்று. இந்த உயரமான இடம்தான் ரெய்சினா ஹில் என்று அழைக்கப்படுகிறது.
பரந்து விரிந்த இந்த இடம் டெல்லியின் பிற பகுதிகளை விட 741 அடி உயரம் கொண்டது இந்தப் பகுதி. இதனால்தான் இதை 'ஹில்' என்று அழைக்கிறார்கள்.
இந்த பகுதியில்தான் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ளது. இதனால்தான் குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்பான செய்திகளின்போது ரெய்சினா ஹில்லை அலங்கரிக்கப் போவது யார் என்று கூறுகிறார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகையைத் தவிர பிரதமரின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம், மத்திய அரசின் தலைமைச் செயலக கட்டடம், அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவை இணைந்த பிளாக் உள்ளது.
மேலும் நாடாளுமன்றம், ராஜ்பாத், விஜய் செளக், இந்தியா கேட் உள்ளிட்டவையும், பல முக்கிய அரசு அலுவலகங்களும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட முக்கியமான இடம்தான் ரெய்சினா ஹில்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications