அன்று நடந்தது என்ன? காங்கிரஸுக்கு ஆகாமல் போனது ஏன்?: குண்டு போட வருகிறது கலாமின் புத்தகம்
Subscribe to Oneindia Tamil

அப்துல்கலாம் ஏற்கெனவே அக்னி சிறகுகள் நூலில் தமது வாழ்க்கையை விவரித்திருக்கிறார். இந்நிலையில் இந்த மாதம் வெளியாக உள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் நூலில் பல குண்டுவீசும் ரக தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சோனியாவுக்கும் தமக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அப்துல்கலாம் விவரித்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் கலாம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு ஏன் ஆகாதவராகவே இருக்கிறார் என்பதற்கான பதிலைச் சொல்லும் விதமாக கலாமின் புத்தகம் வரவிருப்பதால் டெல்லி அரசியலில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications