இன்று வீர வாஞ்சிநாதனின் 101வது நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை
செங்கோட்டை: வீர வாஞ்சிநாதனின் 101வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை மட்டும் போதாது, ஆங்கிலேயனை எதிர்க்க ஆயுத புரட்சியும் தேவை என்பதை உணர்த்திடும் வண்ணம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுக்கும் வண்ணமும் அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலை 10.50க்கு செங்கோட்டையைச் சேர்ந்த வீர வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆஷ்துரையை சுட்டுக் கொன்று விட்டு அதே ரயில் நிலையத்தில் வைத்து தன்னை தானே சுட்டு வீர வாஞ்சி (களச்சாவு) வீர மரணம் அடைந்தார். அவரது வீரத்தை போற்றும் வண்ணம் 1987ம் ஆண்டு செங்கோட்டையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் சிலை அமைக்கப்பட்டது. இன்று அவரது 101வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வீரவாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிகர சுப்பிரமணியன், பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன், நகர்மன்ற தலைவர் மோகன கிருஷ்ணன், தியாகிகளின் வாரிசுகள், செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள், அதி்முக, திமுக, கம்யூனிஸ்ட், பாஜக, பொதுநல அமைப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications