மாதம் 2 முறை வீட்டுக்கு வந்த கணவர்... சக லெக்சரருடன் எஸ்கேப் ஆன கல்லூரி ஆசிரியை!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கல்லூரி பெண் விரிவுரையாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றி வந்த சக லெக்சரருடன் கள்ளக்காதல் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.

நாமக்கல், பரமத்தி வேலூர், காளிபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நடராஜன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. 27 வயதான இவரும் விரிவுரையாளர்தான்.

இருவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் விரைவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார் விஜயலட்சுமி. நடராஜன் சென்னை கல்லூரியில் பணியாற்றியதால் அங்கு போய் விட்டார். மாதம் 2 முறை மட்டுமே வீட்டுக்கு வருவாராம்.

இந்த நிலையில், விஜயலட்சுமிக்கும், தனது கல்லூரியில் பணியாற்றி வந்த ஓசூரைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. கணவர் அருகில் இல்லாதது, தனிமை உள்ளிட்டவை சேர்ந்து விஜயலட்சுமியை தவறான பாதைக்குக் கொண்டு சென்று விட்டது.

இந்த நிலையில் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். எங்கு போனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+