பாஜக சங்மாவை ஆதரித்தால் காங்கிரஸுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தலாம்: சு.சாமி
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளராக சங்மாவை பாஜக ஆதரித்தால் அவருக்காக நான் பிரச்சாரம் செய்வேன் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நேற்று அவரது இல்லத்தில் வைத்து சந்தி்த்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
அதன் பிறகு சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நானும், சங்மாவும் நீண்ட கால நண்பர்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி மீது இப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அதனால் சங்மாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் சங்மாவிடம் உள்ளது. அதனால் அவர் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டார். பாஜக கூட்டணி அவரை ஆதரித்தால் அவருக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வேன். சங்மாவுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி இருந்தால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு்க்கு பெரும் சரிவை ஏற்படுத்த முடியும் என்று நான் அத்வானியிடம் தெரிவித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications