ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய கோரும் காங்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுக்கிறது, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயலுகிறது, நெய்யாற்றில் கேரள அரசு தண்ணீர் விட மறுத்து வருகிறது. . அதை தடுப்பார் யாரும் இல்லை.
இலங்கையில் உள்ள தமிழர்களின் இனப் படுகொலைக்கும் இந்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. தமிழநாட்டு மக்களின் தமிழர்களின் வாழ்வு சூறையாடப்படுவதைப் பற்றி யாரும் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
இந்தப் பிரச்சனைகள் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? என்று எண்ணுகிறபோது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு செய்கிற நன்மையாகும் என்று கூறியுள்ள விஜய்காந்த் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக விஜயகாந்த் அறிக்கை விட்டிருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. அவர் புறக்கணிப்பதற்காக சொல்லியிருக்கிற காரணங்கள் பல தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக நலனிற்காக குரல் எழுப்புகிற பிரச்சனைகள் தான்.
அதற்காக யார் குடியரசுத் தலைவராக வந்தால் நமக்கென்ன என்கிற சித்தாந்தம் நல்லதல்ல.
தேசியத்தை தன் கட்சியிலேயே இணைத்திருக்கும் விஜயகாந்த் தனதுமுடிவை மறுபரிசீலனை செய்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications