ஈரோட்டிலும் ஒரு தீண்டாமை சுவர்?
ஈரோடு: ஈரோடு மாவடத்தில் உள்ள நகப்பாளையத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் என்னும் கிராமத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த சுவரின் மீது கண்ணாடிகள் பதிக்கப்படு யாரும் இதைத் தாண்டி செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவருக்கு இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் 10 அடி தூரத்தில் உள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் செல்ல கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்றாவிட்டால் வரும் ஜூலை 2ம் தேதி நாங்களே இடிப்போம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட சாதிக்காரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை அங்கு வந்து கூட்டம் கூடக் கூடாது என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தது. இந்த பிரச்சனைக்கு சாதிக்காரர்களுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தாசில்தாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாக்குறுதி கொடுத்து 2 மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ளது சாதிச் சுவரே இல்லை என்றும் அந்த சுவர் அங்கே 20 ஆண்டுகளாக இருப்பதாகவும் சாதிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுவர் இடிந்ததால் அதை திரும்பக் கட்டியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications