பிரணாப், சங்மாவுக்கு மல்லுக் கட்டப் போகிறாராம் பத்மராஜன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தேர்தலில் பிரணாப் முகர்ஜி, சங்மாவுக்கு "ஈடு கொடுத்து" போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டுள்ளார். 4 வது முறையாக இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.டெல்லியில் ரூ.15 ஆயிரம் டெபாசிட் கட்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நடுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஒருமுறை, பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 11 முறை, நகராட்சி தலைவர் பதவிக்கு 3 முறை, மேயர் பதவிக்கு ஒரு முறை, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல்களில் 44 முறை, மக்களவைக்கு 24 முறை, மாநிலங்களவைக்கு 27 முறை உள்பட இதுவரை 134 முறை தேர்தல் களத்தை சந்தித்துள்ளார் தேர்தல் மன்னன் பத்மராஜன்!












Click it and Unblock the Notifications