நிதி அமைச்சர் பதவியிலிருந்து நாளை ராஜினாமா: பிரணாப் முகர்ஜி தகவல்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நாளை தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து தமது சொந்த கிராமத்துக்குப் புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், நாளைக்கு நான் ராஜினாமா செய்கிறேன் என்றார். முன்னதாக பிரணாப் முகர்ஜி ஜூன் 28-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.
பிரணாப் மனுத்தாக்கலின் போது சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் அவரை முன்மொழியக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications