குமரியில் விடிய, விடிய வெளுத்துக்கட்டிய மழை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பிடித்த மழை மறுநாள் அதிகாலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சாரலாகவே நீடித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கான நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13.75 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 44.55 அடியாக உள்ளது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.25 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீ்ர்மட்டம் 59.05 அடியாக இருந்தது. இந்த ஆண்டு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் பேச்சிப்பாறை பகுதியில் மட்டும் 10 மிமீ மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறையில் லேசான மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 339 கன அடியில் இருந்து 446 கன அடியாக உயர்ந்தது.
நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. காலையில் நாகர்கோவில் உள்பட சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்தது.












Click it and Unblock the Notifications