சாலை விபத்தில் சிக்கி அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் மரணம்

Subscribe to Oneindia Tamil

Sellur Raju
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி சென்னையில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி. இவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் தமிழ்மணி. அப்போது அடையாறு பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் தமிழ்மணி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஹெல்மட் போடாமல் டூவீலரை ஓட்டிச் சென்றதால் கீழே விழுந்த வேகத்தில் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால்தான் தமிழ்மணி மரணமடைய நேரிட்டுள்ளது. மேலும் அவர் செல்போனில் பேசியபடி டூவீலரை ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+