சுபாஷ் பண்ணையார், 'ராக்கெட்' ராஜாவை கொல்ல எதிர்கோஷ்டி திட்டம்: கூண்டோடு பிடிக்க போலீஸ் பிளான்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி திண்டுக்கல் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
மூலக்கரை சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இருந்த முன்பகையே கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. இது குறித்து சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் நந்தவனபட்டி நிர்மலா, விருதுநகர் சொக்கன்புதூர் பாஷா, ராஜபாளையம் முகவூர் சன்னாசி, நடராஜன் ஆகியோர் கைதாகினர். முக்கிய குற்றவாளியான சுரண்டையைச் சேர்ந்த கோழி அருள் ஆறுமுகநேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
நிபந்தனை ஜாமீனில் விடுதலையான கோழி அருள் தினமும் சுரண்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். மற்ற 4 பேரும் திண்டுக்கல் தாடிகொம்பு போலீசில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
கடந்த இரு வாரத்திற்கு முன் சுரண்டை போலீசில் கையெழுத்திட வந்த கோழி அருளை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றது. இதேபோன்று தாடிகொம்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த மாடசாமி, சன்னாசி, நடராஜன் வந்த கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் கார் டிரைவர் வாசுதேவன் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் கொலைக்கு பழிக்குப் பழியாக அவரது ஆதரவாளர்கள் தான் வெடிகுண்டு்களை வீசியதாக தெரிய வந்தது. இதனால் எந்த தரப்பிலும் எதுவும் நடக்கலாம் என உளவுத் துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து உஷாரான போலீசார் முக்கியப் புள்ளிகளின் ஆதரவாளர்களையும், கூட்டாளிகளையும் கண்காணித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் ஒரு விழா நடைபெற உள்ளது. அதில் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் ஆகியோர் ரகசியமாக கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்காக வரும் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி கொல்ல இரண்டு தரப்பினர் திட்டமிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து உளவுத்துறையினர் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க வியூகம் அமைக்குமாறு நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications