அவரோட 'செக்ஸ்' தொல்லை தாங்க முடியல... ஆசிரியையைக் கொன்றவர் வாக்குமூலம்!
அறந்தாங்கி: ஆசிரியை வானதியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு நாளைக்கு பலமுறை அவருடன் உறவு வைக்க வற்புறுத்தினார். இதனால் உடம்புக்கு ஒத்துவரவில்லை. இதனால் விலகிப் போகலாம் என நினைத்தேன். ஆனால் அவர் வீடியோவைக் காட்டி மிரட்டியதால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார் அறந்தாங்கி ஆசிரியை வானதியைக் கொன்று கைதான வாலிபர் சரவணன்.
அறந்தாங்கியில் வசித்து வந்தவர் 46 வயதான வானதி. இவர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். மகள் கல்யாணமாகி சிங்கப்பூரில் குடியிருந்து வந்தார். மகன் உள்ளார். ஒரு வளர்ப்பு மகளும் உள்ளார்.
25ம் தேதி இரவு வானதி தனது வீட்டு படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார். அவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சரவணன் என்ற மினி பஸ் டிரைவர் போலீஸில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.
சரவணன் அளித்த வாக்குமூலம் - முழு விவரம்:
நான் அரிமளத்தில் இருந்து கே.புதுப்பட்டி வரை வந்து செல்லும் ஒரு மினி பஸ்சில் டிரைவராக பணி புரிந்து வந்தேன். அந்த பஸ்சில் தான் ஆசிரியை வானதி தினமும் வேலைக்கு வருவார். அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
முதலில் அறிமுகம், பிறகு கள்ளக்காதல்
முதலில் நாங்கள் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டோம். பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. நான் தற்போது லோடு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தேன். ஒருநாள் நான் அறந்தாங்கியில் உள்ள ஆசிரியை வானதியின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தேன். ஏற்கனவே ஒரு சிலருடன் கள்ள உறவு வைத்திருந்த ஆசிரியை வானதி அவரை விட 21 வயது குறைந்த என்னுடன் உறவு வைத்துக் கொள்வதை மிகவும் விரும்புவார். இதனால் ஒரு நாளைக்கு என்னுடன் அவர் பல முறை உறவு கொள்வார்.
ஆசிரியையின் வேகத்திற்கு எனது உடல் ஒத்துழைக்கவில்லை
இந்நிலையில் அவரது காமவெறிக்கு எனது உடல் ஒத்துழைக்காததாலும், வீட்டில் எனக்கு பெண் பார்த்து வந்ததாலும், நான் அறந்தாங்கியில் உள்ள ஆசிரியை வானதியின் வீட்டிற்கு அடிக்கடி வருவதை தவிர்த்து வந்தேன். இருப்பினும் வாரம் ஒருமுறையாவது வந்து, அவருடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆசிரியை வானதி எனக்கு போன் செய்து இன்று இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்துவிடு நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்.
வளர்ப்பு மகளுக்கு மது கொடுத்தார்
நான் எனது வீட்டில் இருந்து அறந்தாங்கிக்கு இரவு 9.15 மணிக்கு வந்தேன். நான் வரும் போது அந்த அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேன் அங்கு இல்லை. ஆசிரியை வானதியின் வீட்டிற்கு நான் வந்தவுடன் எங்களுக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக அங்கிருந்த ஆசிரியையின் வளர்ப்பு மகள் நித்யஸ்ரீக்கு குளிர்பானத்தில் சிறிதளவு மதுபானத்தை கலந்து கொடுத்தோம். அதை குடித்தவுடன் நித்யஸ்ரீ ஒரு அறையில் படுத்து தூங்கி விட்டாள்.
பின்னர் ஆசிரியை வானதியும், நானும் ரம் மதுபானத்தை குடித்தோம். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் வானதி எனக்கு ஒரு கத்தியால் மாதுளம் பழம் நறுக்கி கொடுத்தார். தொடர்ந்து என்னை மீண்டும் ஒரு முறை உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார். அதற்கு நான் ஆசிரியை வானதியிடம் எனக்கு வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். அதனால் நான் இங்கு இனி அடிக்கடி வர முடியாது. மேலும் இரண்டு, மூன்று முறை நாம் உல்லாசமாக இருக்க எனது உடல் நிலை இடம் கொடுக்கவில்லை என்று கூறினேன்.
நான் பார்த்தவர்களிலேயே நீதான் பிடித்தவன்...
உடனே ஆசிரியை வானதிக்கு கோபம் வந்து விட்டது. அவர் என்னிடம் நான் பார்த்தவர்களிலேயே நீதான் எனக்கு மிகவும் பிடித்தவன். நீ என்னுடன் நிரந்தரமாக இருக்க வேண்டும். எனக்கு எப்போதெல்லாம் நீ தேவையோ அப்போதெல்லாம் நீ என்னை சந்தோஷப்படுத்த வேண்டும்.
அதைவிட்டு திருமணம் செய்து கொள்வதாக நீ கூறினால், நாம் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது நான் செல்போனில் எடுத்த படத்தை அனைவரிடமும் காட்டி விடுவேன் என்று மிரட்டினார். இதை கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். செல்போன் எடுத்த படத்தை வெளியிட்டால் எனது திருமணம் நின்று விடும் என்று ஆத்திரம் அடைந்தேன்.
போதையில் வந்தது ஆத்திரம்-சரமாரியாக குத்தினேன்
அவர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததுடன், என்னை திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுக்கும் வகையில் பேசியதும் போதையில் இருந்த எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே கீழே கிடந்த பழம் வெட்டிய கத்தியை எடுத்து வானதியின் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி கிழித்தேன்.
வானதி அதிக போதையில் இருந்ததால், நான் கத்தியால் குத்தும்போது என்னிடம் அவரால் போராட முடியவில்லை. மொத்தம் 17 இடங்களில் என் ஆத்திரம் தீரும் வரை கத்தியால் குத்தினேன். உடனே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
நான் யாருக்கும் தெரியாமல் என் உடலில் இருந்த ரத்தத்தை கழுவிக்கொண்டு அரிமளம் சென்றேன். வானதியை கொலை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்து நான் அறந்தாங்கி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் நடந்ததை நேரில் கூறினேன். அவர் உடனே என்னை அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சரணடையச் செய்தார் என்று கூறியுள்ளார் சரவணன்.
சரவணன் சொன்னது உண்மைதானா என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.