நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு நர்ஸ் மகள் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு நர்ஸ் ஒருவரின் குழந்தை பலியானது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டெங்கு காய்ச்சல் இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை நெல்லை மாவட்டத்தில் மட்டும் 29 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஏர்வாடி எஸ்.என்.எஸ். புரத்தைச் சேர்ந்த தமிழ்மாறன்-நிர்மலா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை சுகபூரணிக்கு கடந்த 18ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கடந்த 20ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையி்ல் டெங்கு வார்டில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகி்ச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று குழந்தை இறந்தது. இதனால் நெல்லை மாவட்ட அளவில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 30க உயர்ந்துள்ளது. தென்மாவட்ட அளவில் 57 க உயர்ந்துள்ளது. குழந்தை சுகபூரணியின் தாய் நிர்மலா தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு குழந்தைகள் வார்டில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் வார்டில் 40க்கும் மேற்பட்டவர்கள் என 80 பேர் காய்ச்சலுக்கு சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவரது குழந்தை சாய் பிரசாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+