புதுவையில் நீதி கிடைக்காது: சங்கரராமன் கொலை வழக்கை சென்னைக்கு மாற்ற குடும்பத்தினர் கோரிக்கை
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை நீதிமன்றத்தில் நடந்தால் நீதி கிடைக்காது. அதனால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவைடந்த நிலையில் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்சர்மா ஆகியோர் சாட்சிகளிடம் மறுவிசாரணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெறுவதாக இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 9 பேர் ஆஜர் ஆனார்கள். ஆனால் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 15 பேர் ஆஜர் ஆகவில்லை. சங்கரராமனின் மனைவி பத்மாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா நீதிபதி முருகனிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளோம். இதில் முடிவு தெரியும் வரை புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications