வெள்ளத்தில் தத்தளிக்கிறது அசாம்- கரைபுரண்டோடும் பிரம்மபுத்திரா- 23 மாவட்டங்கள் பாதிப்பு- 30 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Assam flood
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மபுத்திரா நதி. அசாமின் பெரும்பாலான மாவட்டங்கள் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத்தில்தான் அமைந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தற்போது பிரம்மபுத்திராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மொத்தம் 22 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. 173 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளத்தில் இதுவரை மொத்தம் 30 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் காண்டாமிருகங்கள் இருக்கும் ஒரே இடமான அசாமின் காசிரங்கா வனப்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதனல் காசிரங்கா வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மேடான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றன.

இதனிடையே வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+