மீண்டும் பரபரப்பு- சதானந்த கவுடாவை நீக்காவிட்டால் ராஜினாமா- 7 அமைச்சர்கள் மிரட்டல்

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை இன்று மாலைக்குள் மாற்றிவிட்டு புதிய முதல்வராக எதியூரப்பாவின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க வேண்டும் என்பது 7 அமைச்சர்களின் கோரிக்கை.
இன்று காலை 7 அமைச்சர்களும் ஜெகதீஷ் ஷெட்டரின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை நேரில் சந்தித்து இன்று மாலைக்குள் சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளது குறித்து தெரிவித்தனர். எதியூரப்பாவும் அவர்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறைக்குப் போய் வெளியே வந்தது முதல் தமக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று எதியூரப்பா ஓராண்டாக போர்க்கொடி தூக்கி வந்தார். ஆனால் அது பலனளிக்காமல் போகவே தற்போது ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கிவிட துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 7 அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டல் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிய ஜனதா மேலிடமும் கர்நாடக அரசியலில் தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சரை மாற்றும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது..
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications