புனே ஜெர்மன் பேக்கரியில் குண்டுவைக்க கொழும்பில் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள்- இலங்கை அரசுக்கு தொடர்ப

2010-ம் ஆண்டு புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மிர்ஸா ஹிமாய்ட் பெய்க் என்பவன் கைது செய்யப்பட்டிருந்தான். இவனது தகவலின் அடிப்படையிலேயே அபு ஜிண்டால் பற்றிய தகவல்களும் உளவுத்துறைக்கு முதன் முதலாக தெரியவந்தது.
அபு ஜிண்டால் தற்போது சிக்கியிருக்கும் நிலையில் பெய்க் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாக்குதலுக்கு திட்டம் போட்டவன் லஷ்கர் இ தொயா இயக்கத்தைச் சேர்ந்த பயாஸ் காக்ஸி. இதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க அவன் தேர்ந்தெடுத்த இடம் இலங்கைத் தலைநகர் கொழும்பு என்கின்றனர் மஹாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள்.
கொழும்பில் போய் இறங்கியவுடன் விசா வழங்கப்படும் என்பதால் அதனை பயன்படுத்தி கொழும்பில் ரகசிய இடம் ஒன்றில் முகாம் அமைத்து வெடிகுண்டுகளை தயாரித்து, அதை வெடிக்க வைத்து பெய்க் உள்ளிட்டோருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறான் காக்ஸி. 3 வாரங்கள் தொடர்ச்சியாக கொழும்பில் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முகாமில் தற்போது சிக்கியுள்ள அபு ஜிண்டால் இருந்ததாகவும் ஜிண்டால்தான் பெய்க்குக்கு முழுமையான பயிற்சி கொடுத்த தளபதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்ட நாடு இலங்கை. 2008- ஆண்டு யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலப்பகுதி என்பதுடன் பாகிஸ்தான் படையினர் பெருமளவும் போரில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே காலப்பகுதியில் இலங்கையின் தலைநகரிலேயே தீவிரவாதிகள் தங்கி பயிற்சி எடுத்திருப்பதால் இலங்கை அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications