மீனவர்களைத் தாக்க வேண்டிய தேவை எங்களுக்கில்லை, பொய் சொல்கிறார் ஜெ.: இலங்கை கடற்படை
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சனைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது என்று இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் "வீரகேசரி" நாளிதழின் இணைய பக்கத்தில் இலங்கைக் கடற்படையின் செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுல சூரிய கூறியதாக வெளியான தகவல்:
கச்சதீவு பகுதிகளில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக தமிழக அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய தேவை கடற்படைக்கு கிடையாது. ஆனால் மீனவர்கள் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி மீன் பிடிக்கின்றனர். இவர்களை கைது செய்து சட்டத்தின்படி பல முறை நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு போதும் தாக்கியதில்லை.
தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றார். இக் குற்றச்சாட்டு பொய்யானது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளினால் இரு நாட்டு உறவுகளுமே பாதிப்படைகின்றது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications