அண்ணா மேம்பால விபத்து... கைதான பஸ் டிரைவருக்கு உடனே ஜாமீன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா மேம்பால பஸ் விபத்து தொடர்பாக கைதான டிரைவர் பிரசாத்துக்கு உடனடியாக ஜாமீன் அளிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின்மீது 17 எம் நகரப் பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. பாலத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு அது சர்வீஸ் சாலையில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த விபத்துக்கு பஸ் டிரைவர் பிரசாத், செல்போனில் பேசியபடி பஸ்ஸை ஓட்டியதே காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் கைதான உடனேயே அவரை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் இளங்கோ ஜாமீனில் விடுவித்த உத்தரவிட்டார்.
பிரசாத்தும், பஸ் கண்ட்கடரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications