கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ஜூலை முதல் அமல்
நெல்லை: இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அபிஷேக பொருட்கள், பிரசாதங்கள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அன்னதான கூடங்களிலும் பிளாஸ்டிக் டம்பளர் வழங்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 515 கோவில்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கோவில்களோடு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட 220க்கும் மேற்பட்ட கோவில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications