சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் பதில் மனுத் தாக்கல்

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் அதிமுக சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிகை முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ப.சிதம்பரம் தோல்வியடைந்ததாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ப.சிதம்பரம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராஜகண்ணப்பனின் மனுவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், அவரது மனுவை தேர்தல் வழக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த மனுவில் ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் ப.சிதம்பரம் குறிப்பிடும் குறைபாடுகள் சரிசெய்யக் கூடியவை என்பதால் அவரது கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. பணம் பட்டுவாடா செய்வதற்காக எனது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலரை நியமித்திருந்தேன் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. எனது தேர்தல் முகவராகவும் கார்த்தியை நான் நியமிக்கவில்லை. அன்பழகன் என்பவரை கார்த்தி கட்டையால் தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது. எனது காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை தாசில்தார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கைப்பற்றினர் என்ற குற்றச்சாட்டும் பொய்யானது.சுய உதவிக்குழு மூலம் பணம் பட்டுவாடா செய்ததாக என் மீது பழி சுமத்துவதும் அடிப்படை ஆதாரமற்றது. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூலை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications