நாட்டின் மருத்துவ கல்வியின் தரம் குறைந்து வருகிறது: பிரதமர் மன்மோகன்சிங் கவலை

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையையும் திறந்து வைத்தும் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
மருத்துவ கல்வியின் தரம் குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இதனை தொடர்ந்து அனுமதிக்க கூடாது. மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பாட திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும. மருத்துவ மாணவர்களும் கிராமப்புறங்களில் மனமுகந்து பணியாற்ற முன்வரவேண்டும். மருத்துவ கல்வியை மேம்படுத்துவதற்காக மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியையும், சமுதாய கல்வியையும் அளிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.பி.பி.எஸ். பாட திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சிலும் மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் சுகாதார சேவைகள் கிடைக்காத இடங்களில் மருத்துவ கல்லூரியை தொடங்க அனுமதி வழங்கி உள்ளோம்.
நமது நாட்டின் சுகாதார நிலைமைகள் மிக மோசமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சுகாதார நிலையை மேம்படுத்த முடிந்தது. இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கிறோம். இதைபோல் நகர்புற மக்கள் பயன்பெறுவதற்கும் சுகாதார திட்டத்தை தொடங்க உள்ளோம்.
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைதான் உள்ளது. இதைபோல ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் 2 மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை இடங்களையும் அதிகரித்துள்ளோம். சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் போபால், ஜோத்பூர், ராய்ப்பூர், பாட்னா, ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications