ஜூலை, ஆகஸ்ட்டில் பருவமழை தீவிரமடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

Monsoon Rain
டெல்லி: தென்மேற்கு பருவமழையானது வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளா, கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஜூன் மாதம் போதிய அளவு மழை கிடைக்கவில்லை. இருப்பினும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பார்க்கும் மழையளவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 28-ந்தேதி மும்பையில் பெய்த 75.4 மி.மீ. மழையே இந்த சீசனின் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஜூனில் பெய்த மிகக் குறைந்த மழை அளவு இதுவே.

சென்னையை பொருத்தமட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில்தான் பலத்த மழை பெய்யும். தற்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னை நகரில் லேசாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+