சோனியாவை பிரதமராக்கியிருப்பீங்களோ... கலாமுக்கு சரத் யாதவ் கண்டனம்
டெல்லி: சோனியா காந்திக்கு பிரதமராக பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தமது புத்தகத்தில் எழுதியிருப்பதை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் விமர்சித்துள்ளார்.
அப்துல் கலாம் எழுதியுள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில் 2004-ம் ஆண்டு சோனியா பிரதமராக பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும் அவருக்கு பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்தேன் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
இதை விமர்சித்துள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், 8 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த அப்துல் கலாம் தற்போது இப்படி பேசியிருப்பது சுயநலத்தை அதிகரித்துக் கொள்ளத்தான் என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவி போன்ற பெரிய பொறுப்புகளில் இருப்பவர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதுவரை கலாம் மீது இருந்த மரியாதை இப்போது போய்விட்டது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் பிரணாப் முகர்ஜிக்கு சரத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இக்கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications