பருவமழை தாமதம் : மணிமுத்தாறு அணையில் தண்ணீர் வற்றியது
நெல்லை: பருவமழை தாமதமடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, காரையாறு உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்துள்ளது. தண்ணீர்கொட்டும் அருவிகளில் பாறை இடுக்குகளில் மட்டும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் காணப்படுகின்றன. வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் ஜூன் மாதம் முடிந்தும் மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் கடும் வறட்சி காணப்படுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீ்ர் தேவையை சமாளிக்க கூட திறனின்றி பொதுப்பணிதுறை திணறி வருகிறது. மணிமுத்தாறு அருவியில் எப்போதும் தண்ணீர் கொட்டும். கடும் வறட்சி காரணமாக அருவியில் தண்ணீர் குறைந்துள்ளது.
பாறை இடுக்குகளில் மட்டும் லேசான தண்ணீர் கசிவு உள்ளது. இந்ததண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 118 கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.63 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 கன அசி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணைப்பகுதி குளம் போன்று காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications