சோனியா விவகாரத்தில் தயங்காமல் கலாம் உண்மையை பேச வேண்டும்-சாமி

நான் சோனியா காந்திக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், அவரோ யாருமே எதிர்பார்த்திராத மன்மோகன் சிங்கின் பெயரைக் கூறினார் என்று தனது எதிர் வரும் புதிய நூலில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி பிரதமராவதை அப்துல் கலாம்தான் தடுத்தார் என்று காங்கிரஸார் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் கலாமின் இந்தக் கூற்று புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கலாம் உண்மை பேச வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஹாங்காங்கிலிருந்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வரலாற்றுக்கு உண்மையானவராக கலாம் இருக்க வேண்டும். வரலாற்றை மாற்ற முயலக் கூடாது.
சோனியா காந்திக்கு 2004ம் ஆண்டு மே 17ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் அப்துல் கலாம். அந்தக் கடிதத்தை அவர் முழுமையாக வெளியிட முன்வர வேண்டும். அது வெளியானால், பிரதமர் பதவிக்கு நீங்கள் நிறுத்தப்பட்டால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கலாம் கூறியது வெளிச்சத்திற்கு வரும்.
தனது கடிதத்தை கலாம் பகிரங்கமாக வெளியிட்டால் அவர் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இந்தக் கடிதத்திற்கு மேலும் இரண்டு சாட்சிகள் உள்ளனர். ஒருவர் பிரதமர் மன்மோகன் சிங், இன்னொருவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங். அவர்கள் இருவருக்கும் மட்டுமே இந்தக் கடிதம் குறித்துத் தெரியும்.
சோனியா காந்தியின் பெயர் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் நான் அன்று பிற்பகல் 12.30 மணிக்கு அப்துல் கலாமை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தேன். அப்போது சோனியாவை பிரதமராக்கினால் பெரும் சட்ட சிக்கல்கள் எழும் என்பதை அவரிடம் விளக்கினேன். பல சட்ட தடங்கல்கள் இருப்பதையும் அவருக்கு விவரித்தேன்.
இதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு சோனியா காந்திக்கு தான் கொடுத்திருந்த அப்பாயிண்ட்மென்ட்டை கலாம் ரத்து செய்தார். இதுதான் நடந்த உண்மை. எனவே அப்துல் கலாம் தயவு செய்து தனது கடிதத்தை வெளியிட வேண்டும். அப்போதுதான் அவர் வரலாற்றுக்கு உண்மையானவராக இருக்க முடியும் என்றார் சாமி.
சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் கூட அவர் சட்டப்படி இன்னும் இத்தாலியர்தான். எனவே அவருக்குப் பிரதமர் பதவியை அளிக்கக் கூடாது என்று பி.ஏ.சங்மா, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்ட பலரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்தன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அப்துல் கலாம் தான் எழுதியுள்ள புதிய நூலில் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் உண்மையை மறைப்பதாக சாமி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications