மோடியை முதல்வராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்... பாஜகவினரை உசுப்பிவிடும் கேசுபாய்
அகமதாபாத்: நரேந்திர மோடியை மீண்டும் குஜராத் மாநில முதல்வராக்கிவிடக் கூடாது என்று மூத்த பாஜக தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் பாஜக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமது ப்ளாக்கில் கேசுபாய் படேல் எழுதியுள்ளதாவது:
குஜராத் மாநில பாஜக தொண்டர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் நரேந்திர மோடியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்காதீர்கள். குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு குடும்பம் போல செயல்படுகின்றனரா? இல்லையே.. கட்சித் தொண்டர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். மாநிலத்தில் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஆட்சியாளர்களைப் பொருத்தவரையில் தொழிலதிபர்கள்தான் அவர்களது நண்பர்கள். தேஎர்தல் வரும்போதுதான் தொண்டர்களின் நினைவு அவர்களுக்கு வரும். அதனால் நரேந்திர மோடியை மீண்டும் முதல்வராக்கிவிடக் கூடாது என்பதில் அனைத்து தொண்டர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கேசுபாய் படேல்.
குஜராத் மாநில முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அவரை நீக்கிவிட்டு முதல்வராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருந்த கேசுபாய் படேல் கடந்த சில மாதங்களாக மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications