பாஜக கூட்டணியின் பி.ஏ.சங்மாவின் வேட்பு மனுவும் ஏற்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜூலை 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. அப்போது பிரணாப் முகர்ஜி மற்றும் பி.ஏ.சங்மாவின் வேட்புமனுக்களை ஏற்பது தொடர்பாக இருதரப்பிலும் பரஸ்பரம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றும் வேட்புமனு பரிசீலனை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
பி.ஏ.சங்மாவின் வேட்புமனு மீதான ஆட்சேபனையை தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் அக்னிகோத்ரி நிராகரித்துவிட்டதுடன் அவரது மனுவை ஏற்பதாகவும் அறிவித்துவிட்டார்.
வேட்புமனுத்தாக்கல் செய்த போது பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பது சங்மாவின் புகார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்கிறது பிரணாப் தரப்பு. இது தொடர்பான விளக்கம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரி பிரணாப் மனு மீதான தமது முடிவை அறிவிப்பார்.












Click it and Unblock the Notifications