இலங்கைக் கடற்படையின் தொடரும் அட்டூழியம்-அ ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது. நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த மீனவர்கள், அவர்களைக் காப்பாற்றப் போன மீனவர்கள் என 10 பேரை மீண்டும் சிறைபிடித்து சென்றிருக்கிறது. இதேபோல் தனுஷ்கோடி மீனவர்கள் மூவரை கடத்தல்காரர்கள் என்று கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை. நடுக் கடலில் படகு பழுதான நிலையில் தவித்த அவர்களை இலங்கை கடற்படை செய்தது. இதேபோல் அவர்களைத் தேடிச் சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்று தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளது.
மேலும் தனுஷ்கோடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் கடத்தல்காரர்கள் என்றும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது மொத்தம் 13 பேர் இலங்கை கடற்படை வசம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.