அதிமுக அரசைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்!
திண்டுக்கல்: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பானது.
திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
அதேபோல திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போன பின்னர் பிற்பகல் 1 மணியளவில் அங்கு வந்த சீனிவாசன் என்ற திமுக தொண்டர், அதிமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டார். அதன் பின்னர் தனது தலையில், பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்து அங்கிருந்த போலீஸார் ஓடி வந்து தீப்பெட்டியைத் தட்டி விட்டு சீனிவாசனை தடுத்து நிறுத்தினர். பிறகு அவரையும் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications