மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'
திருச்சி: மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை குறைக்க, மின் விபத்துகளை தவிர்க்க தேவையான சில முக்கிய வழிமுறைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மின்சாரம் தாக்கி காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சாலைகளில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொது மக்கள் அதன் அருகில் செல்லவோ, அதனை தொடவோ கூடாது. அது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்சார வாரிய பணியாளர்களை தவிர வேறு யாரும் மின் தடையை சரி செய்ய மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணியில் ஈடுபட கூடாது. பொது மக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் செல்லும் மின்பாதைகள், மின்கம்பிகளை தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. முடிந்த வரை மின் கம்பிகளின் அருகில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
சுமை ஏற்றி செல்லும் டிராக்டர், லாரிகள் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை, கம்பிகளை உரசாமல் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு மற்றும் கட்டிடம் கட்டும்போது மின் பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
திருவிழா காலங்களில், தேரோட்ட நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் போது மின் இணைப்பில் மின்நிறுத்தம் செய்து விட்டு பணியை கவனமாக செய்ய வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications