ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண ராஜபக்சேவிடம் வலியுறுத்தினேன்: கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
சென்னை: தனித் தமிழீழம் கோரி டெசோ மாநாடு நடத்துகிறோம் என்று திமுக அறிவித்திருக்கும் நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தாம் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியிடப்பட்ட கருணாநிதிக்கு மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா பேச்சு தொடர்பாக ஜூன் 20-ந்தேதியிட்ட தாங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். ஜூன் 21-ந்தேதி ரியோடி ஜெனிரோ மாநாட்டில் இலங்கை அதிபரை சந்தித்தேன். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாகவும், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு அமைத்து கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன்.

இலங்கைக்கு உள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு தகுந்த அரசியல் தீர்வுகாண தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன். அதுதான் இலங்கை தமிழர்கள் கவுரவமான வாழ்க்கை வாழவும், சொந்த தாயகத்தில் வசிப்பது போன்ற உணர்வை பெறவும் போதுமான நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தேன் என மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+