ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண ராஜபக்சேவிடம் வலியுறுத்தினேன்: கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனித் தமிழீழம் கோரி டெசோ மாநாடு நடத்துகிறோம் என்று திமுக அறிவித்திருக்கும் நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தாம் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியிடப்பட்ட கருணாநிதிக்கு மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா பேச்சு தொடர்பாக ஜூன் 20-ந்தேதியிட்ட தாங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். ஜூன் 21-ந்தேதி ரியோடி ஜெனிரோ மாநாட்டில் இலங்கை அதிபரை சந்தித்தேன். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாகவும், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு அமைத்து கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன்.
இலங்கைக்கு உள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு தகுந்த அரசியல் தீர்வுகாண தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன். அதுதான் இலங்கை தமிழர்கள் கவுரவமான வாழ்க்கை வாழவும், சொந்த தாயகத்தில் வசிப்பது போன்ற உணர்வை பெறவும் போதுமான நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தேன் என மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
Prime Minister Manmohan Singh has told his government's key partner DMK that he had taken up with Sri Lankan President Mahinda Rajapakse the steps required for rehabilitation of Sri Lankan Tamils in that country.In his letter dated 25 June to DMK chief M Karunanidhi in response to the latter's objections to the reported controversial remarks of a Sri Lankan Minister relating to Tamils, Singh said he had discussed this matter also with Rajapakse.I have also stressed the need for appropriate political and other arrangements within Sri Lanka which will enable the Sri Lankan Tamils to live a life of dignity and to feel at home in Sri Lanka," Singh said in the letter released by the DMK headquarters Anna Arivalayam here.