டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை எம்.பி.க்களுக்கும் அழைப்பு - கருணாநிதி தகவல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெசோ மாநாட்டில் பங்கேற்க வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.
முல்லைப் பெரியாறு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கை ஒருதலைபட்சமானது. எனவே, அதனை ஏற்க மாட்டோம் என்றும், புதிய அணை கட்டப்பட்டே ஆக வேண்டும் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழகமும் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கை விமானப் படையினரை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களுக்கு வேறு மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டால் அப்போது பார்ப்போம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications