For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜம்மு கஷ்மீரில் பயங்கர நிலச்சரிவு- 400 பேரை மீட்டது ராணுவம்
லே: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 400 பேரை ராணுவம் மீட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லே மாவட்டத்தில் சங்கலா பாஸ் என்ற கணவாய் உள்ளது. 17,590 அடி உயரத்தில் உள்ள இந்த இடத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வர். சங்கலா பாஸ் பகுதியில் பிரம்மாண்ட ஏரி அமைந்திருக்கிறது. ஏரியின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளது. மற்ற பகுதி சீனாவில் உள்ளது.
இந்நிலையில் திடீரென பயங்கரமான நிலச்சரிவு அப்பகுதியில் ஏற்பட்டது. இதில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் பலரும் சிக்கிக் கொண்டனர்.. இதையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் மும்முரமான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் இருந்து 400 பேர் மீட்கப்பட்டனர். 150 வாகனங்களும் மீட்கப்பட்டன. உயிர்சேதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
Comments
English summary
Over 400 tourists and locals trapped at the Changla pass in Kashmir's Leh district after a massive landslide have been rescued by the security forces, an official here said. Nearly 150 vehicles with tourists and locals were rescued by an Indian Army team late Saturday and were offered food and shelter, an army spokesman said.
Story first published: Sunday, July 8, 2012, 14:19 [IST]