குடியரசுத் தலைவர் தேர்தலில் "அரசியல் பலிகடா" வாக்கப்பட்ட சதானந்த கவுடா: சரத் யாதவ் கருத்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலைக் கருத்தில் கொண்டே கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளார் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை பாஜக ஆதரிக்கிறது. பாஜகவின் வாக்குகள் அனைத்தும் சங்மாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளார். கர்நாடகத்தில்தான் சாதி பார்க்கப்படுகிறது என்பது உண்மையல்ல..நாடு முழுவதும் ஜாதி பார்க்கப்படுகிறது.. அரசியலில் சாதி ரீதியாகவும் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. தற்போது சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளதால் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு கிடைக்கக் கூடும் என்றார் அவர்,












Click it and Unblock the Notifications