தூத்துக்குடி கலெக்டரை கண்டித்து டாக்டர் கிருஷ்ணாமி ஆர்பாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமாரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமாரை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, குடிநீர் வசதி போன்றவைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து எனக்கு 20,000க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. இப்பிரச்சனை குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் தகுந்த பதில் அளிப்பது இல்லை என்றார்.
கலெக்டரை கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications