என்ன காரியம் செய்து விட்டேன்... வருத்தப்பட்ட ஜின்னா!

இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், பின்னர் அதுதொடர்பாக முகம்மது அலி ஜின்னா வருத்தப்பட்ட சொன்ன வார்த்தைகள் குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்.
அது...
1947. இந்தியாவை இரண்டாகப் பிரித்து விட்டார்கள். இரு பக்கமும் இருந்த மக்கள் தத்தமது விருப்பபடி நாடுகளை மாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்போது ராவல்பிண்டியிலும், ஜீலத்திலும் பெரும் கலவரம் வெடித்தது. இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லீம்களுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது. இந்துக்களும், சீக்கியர்களும் ஒருபக்கம் திரள, முஸ்லீம்கள் மறுபக்கம் திரள பெரும் உயிர்ச்சேதம். லாகூர்தான் போர்க்களமாக காணப்பட்டது. இரு தரப்பிலும் பெருத்த உயிரிழப்பு. எங்கு பார்த்தாலும் ரத்தக்களறி.
பிரிவினை ஏற்படுத்திய கலவரம், உயிரிழப்பு, துப்பாக்கிச் சூடு, வன்முறை, பாலியல் பலாத்காரம் முகம்மது அலி ஜின்னாவை பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது. இந்தியர்கள், பாகிஸ்தானியர்களை குறைத்து மதிப்பிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நேரத்தில்தான் எல்லைப் புறத்தில் பல லட்சம் மக்கள் குவிந்து பெரும் உயிரபாயத்தில் இருப்பதாக தகவல் வந்து சேர்ந்தது.
லாகூரில் ஜின்னா இருந்தபோது அப்போதைய அமைச்சர் இப்திகார் உத் தின் மற்றும் பாகி்ஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் மஸார் அலி கான் ஆகியோர் ஜின்னாவை ஒரு காரில் கூட்டிக் கொண்டு பிரிந்து போயிருந்த பஞ்சாப் வழியாக சென்றனர்.அப்போது சாரை சாரையாக மக்கள் பாகிஸ்தானுக்குள் வருவதையும், பாகிஸ்தானிலிருந்து போவதையும் பார்த்தார் ஜின்னா.
இதைப் பார்த்த அவர் தனது நெற்றியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு என்ன காரியம் செய்து விட்டேன் (நாட்டை துண்டாடியது தவறு என உணர்ந்து) என்று வருத்தத்துடன் கூறினார். இதை பின்னாளில், மஸார் அலி கானின் மனைவி தஹிரா என்னிடம் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் குல்தீப்












Click it and Unblock the Notifications