சக்திவேல், நிர்மலா ...ஒன்றாக மலை மீது தற்கொலை!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணும் கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதால் ஒன்றாக சேர்ந்து விஷம் குடித்துச் செத்துப் போனார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு வயது 25. கல்யாணமானவர். இதேபோல நாமக்கல் மாவட்டம் திருமால்பட்டி அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் 27 வயதான லாரிடிரைவர் சக்திவேல். இவருக்கும் கல்யாணமாகி விட்டது. இந்த நிலையில் நிர்மலாவுக்கும, சக்திவேலுவுக்கும் கள்ளக்காதல் மூண்டது.
இது ஊருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தெரிந்து பெரும் பிரச்சினையாகி விட்டது. அடிக்கடி இருவரது வீடுகளிலும் சண்டை வெடித்தது. இதனால் மனம் நொந்து போன கள்ளக்காதலர்கள் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து திருமால்பட்டி மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு விஷம் குடித்தனர். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த சிலர் இவர்களைப் பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டார். மருத்துவமனையில் நிர்மலாவும் இறந்து போனார்.












Click it and Unblock the Notifications