ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை நாள்தோறும் கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

க. அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தாமதப்படுத்துவதற்காக பல காரணங்களைக் முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் கூறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக, தன்னிடம் தமிழிலேயே கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று அன்பழகன் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது, அன்பழகனின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications