பதம்நாப சுவாமி கோயிலை அரசுடமையாக்க சரத் யாதவ் கோரிக்கை
டெல்லி: கேரளாவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ள பத்மநாபசுவாமி கோயிலை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சரத்யாதவ் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள பணக்கார கோயில்களை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும். கோயில்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு உரியவை. குறிப்பாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருக்கும் பத்மநாப சுவாமி கோயிலை அரசுடைமையாக்க வேண்டும்.
அந்த சொத்துகளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கோயில் சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications