கோவை மணல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
கோவை: திருப்பூரில் மணல் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளர்கள் பொதுப் பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காங்கயம், வெள்ளகோவில் ரோட்டில் அதிகப் பாரம் ஏற்றி வந்த 117 மணல் லாரிகளையும், பனப்பாளையம் சோதனைச்சாவடியில் 20 லாரிகளையும், தாராபுரம் பகுதியில் 13 லாரிகளையும், உடுமலை பகுதியில் 3 லாரிகளையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
மோட்டார் வாகன சட்டப்படி ஓவர் லோடுக்கு ரூ.2,000 மற்றும் லாரியில் கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு யூனிட் மணலுக்கும் ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு லாரிக்கும் சராசரியாக ரூ.8,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. 10 வீல் கொண்ட பெரிய அளவிலான டாரஸ் லாரிக்கு ரூ.21,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற சட்டமீறலில் ஈடுபட்ட மணல் லாரிகள் மூலம் காங்கயம் போலீசார் ரூ.12 லட்சத்து 21,211ம், பல்லடம் போலீசார் ரூ.2.14 லட்சமும் அபராதமாக வசூலித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்குக் கோவை மணல் லாரி உரிமையளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போலீசாரை கண்டித்து கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போரட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டைச் சேர்ந்த 4,000 லாரிகள் பங்கேற்றன. இந்நிலையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும், எனவே உடனே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கோவை மண்டல மணல் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications