திருச்சுழி அருகே கலவரம்: தேக்கு தோப்புக்கு தீ- 60 பேர் கைது
திருச்சுழி: திருச்சுழி அருகே ஏற்பட்ட கலவரத்தில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தேக்கு தோப்பு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டங்குளம் கிராமத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த வீரன் அழகுமுத்துக்கோன் நினைவிடம் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள் என்பதால் இந்த நினைவிடத்திற்கு இராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாகச் சென்று கொண்டு இருந்தது.
வாகனங்களில் சென்ற சிலர் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரில் வாகனங்களை நிறுத்தி அங்கு உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு, தண்ணீர் பாக்கெட்டுகளை அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மீது எறிந்துள்ளனர். இதை அருகில் வசிக்கும் கிராமத்தினர் வந்து தடிக்கேட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது.
இதில் அந்த ரோட்டில் சென்ற 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்திற்கும், அருகில் உள்ள தேக்கு மரத் தோப்பிற்கும் தீ வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.முருகேசன், ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் வேலுசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.நஜ்மல்கோதா உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதனால் அருப்புக்கோட்டை திருச்சுழி பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications