பெண்ணை கொன்று பணம், நகை கொள்ளை: மகனின் நண்பனே தீர்த்துக்கட்டிய கொடூரம்
சென்னை: சென்னை ராயபுரத்தில் அரிசிக்கடை அதிபர் மனைவியைக் கொன்றவர்களை போலீசார் சம்பவம் நடந்த 15 மணிநேரத்திற்குள் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகை, பணத்தை கொடுத்து வைத்திருந்த பெண் பாத்திமாவும் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயபுரம், பி.ஏ.என். ராஜரத்தினம் சாலை 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாஸ்கர். அரிசி வியாபாரி. அவரது மனைவி ஞானசவுந்தரி (45). அவர்களது மகன் தினேஷ் குமார். தி. நகரில் துணிக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த ஞானசவுந்தரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலை நடந்த 15 மணிநேரத்திற்குள் கொலையாளிகள் தினேஷ் குமாரின் நண்பர் சுரேஷ்(26) மற்றும் அவருடைய நண்பன் சதீஷ்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தினேஷ் குமாரின் நண்பன் என்பதால் சுரேஷ் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பெரும்பாலான நேரம் வீட்டில் ஞானசவுந்தரி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தினேஷ் குமாரின் வீட்டுக்கு தனது நண்பன் சதீஷுடன் வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த ஞானசவுந்தரியை ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர். கொள்ளையடித்தவற்றை தங்களுக்கு நெருக்கமான பாத்திமா(40) என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்தனர். இந்லிலையில் போலீசார் சதீஷையும், சுரேஷையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நகை மற்றும் பணத்தை வைத்திருந்த பாத்திமாவையும் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications