துபாயில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: விசாரணை கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: துபாயில் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி்சசூட்டில் பலியான சேகரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய இழப்பீட்டை அம்மீனவர்கள் பெறுவதற்கான வழிவகைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications